Recent Update

Satagaya Unsolved Mysterie Tamil

செட்டகாயா மர்மமான வழக்கு 

ஜப்பானில் உள்ள செட்டகாயா என்ற பகுதியில் நடந்த குடும்ப கொலை சம்பவம் மிகவும் பிரபலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொலை வழக்கில் இன்றும் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் 12,545 தடயங்கள் கிடைத்தும், 46,044 போலீசார் பணியாற்றியும் கொலையாளி சிக்கவில்லை. அப்படி என்ன வழக்கு இது? அந்த குடும்பத்திற்கு என்ன தான் நடந்தது? முழுமையாக கீழே பார்ப்போம் 


ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் செட்டகாயா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு கிரவுண்டு உள்ளது. அதைச் சுற்றி சில குடியிருப்பு பகுதியிருந்தது. அதில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள மைதானத்தைப் பெரிது படுத்த எண்ணிய ஜப்பான் அரசாங்கம் அந்த பகுதியில் உள்ளவர்களாக்கு வேறு பகுதியில் இடம் வழங்க ஏற்பாடு செய்தனர். இவை எல்லாம் 2000வது ஆண்டில் நடக்கிறது. அப்பகுதியில் வசித்த ஒவ்வொருவராக அந்த இடத்தை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றனர்.

அந்த பகுதியில் வசித்து வந்த குடும்பத்தான் மிகியோ மியாஸவா என்பவரின் குடும்பம் வசித்து வந்தனர். அவர்கள் வீட்டில் மிகியோ, அவரது மனைவி யாசூகு, 8வயது மகள் நனா, 6 வயது மகன் ரெய். இவர்கள் எல்லாம் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பாகத்தில் இவர்களது குடும்பமும், இன்னொரு பாகத்தில் யாசூகுவின் தயார், சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகிவரும் வசித்து வந்தனர். இருவீடும் ஒரே வீடு போல வெளியிலிருந்து பார்க்கும் போது தெரிந்தாலும் உள்ளே குறுக்கே ஒரு சுவர் இருந்தது. இருவீட்டிற்கும் எந்த தொடர்பும் உட்புறமாக இல்லை. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் வீட்டை விட்டு வெளியே வந்து தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து காலி செய்து விட்டனர். இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் இன்னும் வேறு இடத்தில் இவர்களுக்கு வீடு ஒதுக்காததால் அங்கேயே தங்கியிருந்தனர். இன்னும் சில மாதங்களில் அவர்களும் வீட்டை காலி செய்துவிட்டுச் செல்லும் மன நிலையிலிருந்தனர். இந்நிலையில் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அதிகாலையில் யாசூகுவின் தாயார் ஆஸிஜெய்னோ, யாசூகுவிற்கு வழக்கம் போல போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்கவில்லை.

விடிந்து சில மணி நேரங்கள் ஆகியும் ஏன் யாரும் எழும்பவில்லை என ஆசிக்குச் சந்தேகம் வந்தது. பின்னர் வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் எனச் சென்று யாசூகுவிற்கு சென்று காலிங் பல்லை அடித்துப் பார்த்தார். யாரும் கதவைத் திறக்கவில்லை. அதனால் அவருக்குச் சந்தேகம் அவரிடம் இருந்த இன்னொரு சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்றார். வீட்டிற்குள் சென்று பார்த்தவருக்கு மாபெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்ததது.

வீட்டிற்குள் மாடிப்படிக்குக் கீழே மிகியோ கத்தியால் குத்தப்பட்டு வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதைப் பார்த்துத் திடுக்கிட்ட அஸி ரூமிற்குள் சென்று பார்த்த போது அங்கு யாசூகு, மற்றும் நனா ஆகியோர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தனர். 2வது மாடியில் ரெய் கழுத்து நெருக்கப்பட்டதால் உயிரிழந்து கிடந்தான். இதைக் கண்டதும் அஸிக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது. என்ன நடந்தது என்று அவருக்கு எதுவும் புரியவில்லை. என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை காவல்துறை உதவியை நாட போலீசிற்கு போன் செய்ய போனை எடுத்தார்.

போனை எடுத்த போது தான் போன் வயர் அறுக்கப்பட்டு இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து போலீசாக்கு போன் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் துவங்கினர். முதற்கட்ட விசாரணை நடந்தினர். இந்த கொலை எப்படி நடந்திருக்கலாம் என யூகித்தனர். வீட்டில் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள் கிடந்த இடம் மற்றும் போசிஷன், உள்ளிட்ட பலவற்றை வைத்து ஒரு யூகத்தைச் செய்தனர்.

அதன் படி வீட்டின் முன் கதவும், பின் கதவும் பூட்டிய நிலையிலேயே இருந்தது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்த ஒரு அறையின் ஜன்னல் மட்டுமே உடைந்திருந்தது. அதனால் கொலைகாரன் அந்த வழியாக வந்து போகும் போதும் அந்த வழியாக மட்டுமே சென்றிருக்கலாம் என முடிவு செய்தனர். அவன் உடைத்த ஜன்னலுக்கு அருகில் உள்ள அறையில்தான் சிறுவன் ரெய் இறந்து கிடந்தான்.

அதுவும் அவன் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளான்.அதனால் வீட்டிற்குள் வந்த கொலைகாரன் முதலில் ரெய்யைதான் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறான். மிகியோ படிக்கட்டிற்குக் கீழ் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். படியின் மேல் பகுதியில் இவரது ரத்த கரைகள் இருந்துள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது ரெய் மூச்சு திணறிய போது சத்தம் போட்டிருக்கலாம். அதைக் கேட்டு மாடிப்படிக்கு வந்த மிகியோவை கொலை காரன் படிக்கட்டிலேயே கொலை செய்து கீழே தள்ளி விட்டிருக்கலாம்.

பின்னர் வீட்டிற்குள் வந்து யாசூகு, மற்றும் நைனாவைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் யோசித்தனர். மேலும் கொலை செய்த அவன் வீட்டிற்குள்ளேயே சில மணி நேரம் இருந்துள்ளான். குறிப்பாக அவன் வீட்டில் உள்ள பொருட்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளான்.

மிகியோவின் கணினியைப் பயன்படுத்தியுள்ளான். அதன் மூலம் அவர் சில விஷயங்களை இணையத்தில் தேடியுள்ளான் எங்கோ செல்வதற்குச் சீட்டு முன் பதிவு செய்யவும் முயற்சி செய்துள்ளான். அதன் பின்னர் அவர் மிகியோ வீட்டுக் கழிவறையையும் பயன்படுத்தியுள்ளான். கடைசியாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தான் அணிந்து வந்த உடையை அந்த வீட்டிலேயே கழட்டிப் போட்டு விட்டு அங்குள்ள மிகியோவின் ஆடைகளை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கிருந்து தான் வந்த வழியிலேயே தப்பியுள்ளான். உள்ளே வந்ததும், வெளியே சென்றதும் ஒரே வழியாகத் தான் இருந்துள்ளது.

கிடைத்த ஆதாரங்களை எல்லாம் வைத்து இப்படிதான் கொலைகள் நடந்திருக்கும் என போலீசார் நினைத்தனர். அதன் பின் இது யாராக இருக்கும் என அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் துவங்கினர். முதலில் யாசூகுவின் தாய் ஆசியிடமிருந்து விசாரணையைத் துவங்கினர். அவருக்கு இந்த கொலை குறித்த எந்த வித தகவலும் தெரியவில்லை. என்ன நடக்கிறது, நடப்பது கனவா நினைவா என்பது கூட தெரியாத நிலையல் அவர் இருந்தார்.

பின்னர் யாசூகுவின் சகோதரி மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறியது இரவில் வீட்டிலிருந்து சத்தம் வந்தது. கணவன் மனைவிக்குள் ஏதாவது சண்டையாக இருக்கலாம் என விட்டுவிட்டோம் சில நொடிகளில் சத்தம் இல்லாததால் எதுவும் பெரிய பிரச்சினை இல்லை போல என்றே நினைத்தோம் மற்றபடி எங்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்றே பதிலளித்தனர்.

அதன் பிறகு அப்பகுதியில் வசித்து வந்த மற்றொரு குடும்பத்தினரிடம் விசாரித்த போத இந்த வழக்கில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அவர்கள் இந்த வீட்டிற்கு முன்பு ஒரு மர்மமான முறையில் வாகனம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்ததாகவும், அதற்கு முந்தைய நாள் இவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள மைதானத்தில் மூன்று பேர் ஸ்கேட்டிங் செய்ததாகவும், அவர்கள் அதிகம் சத்தம் போட்டதால் மிகியோவிற்கும் அவர்களுக்கும் சண்டை நடந்ததாகவும் கூறினார். அதை அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தாக கூறினார்.

ஆனால் இவை குறித்து அஸிக்கும் , யாசூகுவின் சகோதரி குடும்பத்திற்கும் எதுவும் தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திலிருந்து கொலையாளி கழட்டிப் போட்ட சட்டை, ரத்த கரைகள், அவர் மிகியோவின் வீட்டில் கணினி பயன்படுத்திய தகவல்கள், அவனது கைரேகைகள், அவன் மிகியோவின் வீட்டில் கழிவறை பயன்படுத்தியதால் அதிலிருந்த கழிவுகள் என அத்தனையையும் தடயங்களாக எடுத்தனர். ரத்த கரைகள் மூலம் இறந்தவர்களின் டிஎன்ஏவுடன் புதிய டிஎன் ஏ ஒன்று இருந்தது அது தான் கொலையாளியின் டிஎன்ஏவாக இருக்கும் என போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். மிகியோ, யாசூகு பணியாற்றிய இடங்கள், அவர்களுக்கு இருந்த முன் விரோதம், நனா மற்றும் ரெய் ஆகியோர் பற்றி தகவல்கள், அஸி மற்றும் யாசூகுவின் சகோதரி குடும்பத்தினரிடம் குறுக்கு விசாரணை எனப் பல விதமான விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை வைத்து போலீசாரை ஒரு கால் டாக்ஸி ஓட்டுநர் தொடர்புகொள்கிறார். அவர் மூலம் மிக முக்கியமான ஒரு துப்பு கிடைக்கிறது.

மேலும் அதில் காயமடைந்தவர்களின் ரத்த கரை இன்னும் தன் காரில் இருப்பதாகக் கூறி தன் காரை போலீசாரிடம் காட்டினார். போலீசார் அந்த வாகனத்தில் உள்ள ரத்த கரையை எடுத்துச் சோதித்த போது கொலை நடந்த வீட்டில் கிடைத்த கொலையாளியின் இரத்தமாதிரியுடன் ஒத்துப் போனது அதனால் கொலை செய்தவன் தான் இந்த காரில் ஏறிச் சென்றார்கள் என உறுதி செய்தார்கள்.

இப்படியாக இந்த வழக்கு விசாரணை சென்று கொண்டிருந்ததே தவிர இந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கு குறித்த விசாரணையில் எந்த வழியும் ஒருமுடிவை எட்டாமல் பாதியிலேயே நின்றது. இதனால் இந்த வழக்கு குறித்த விசாரணையில் எதுவும் ஒரு குற்றவாளியைக் கண்டு பிடிக்கவில்லை. ஏன் சந்தேகப்படும் நபரைக் கூட அடையாளம் காட்ட முடியவில்லை.

கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என நடந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்திற்காக நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டிலிருந்த பணத்தில் பெரும்பாலான பணம் அப்படியே இருந்தது. மிகச் சொற்பமான அளவிலான பணம் மட்டுமே காணாமல் போயிருந்தது. அதுவும் அஸி கொடுத்த தகவலின் படிதான் மொத்த பணம் கணக்கிடப்பட்டதால் அஸி கணக்கில் விடுதலோ அல்லது அஸிக்கு தெரியாமல் மிகியோ செலவு செய்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதனால் இந்த கொலைகளுக்குக் கொள்ளையடிப்பது நோக்கமாக இருக்காது என போலீசார் நம்புகின்றனர்.

சரி பெண் மீதான மோகம் அல்லது ஆசை காரணமாக நடந்திருக்கலாம் என்றால் கொலை செய்யப்பட்ட பெண் இருவர் தான் ஒன்று யாசூகு, மற்றொன்று நனா இருவரும் கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படவில்லை. ஆனால் ரெய், மற்றும் மிகியோவை காட்டிலும் மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர். இதன் மூலம் கொலைகாரன் பெண்களைப் படிக்காத சைக்கோவாக இருக்கலாம் என முடிவு செய்தனர்.

இந்த கொலை பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள் இதுதான். இந்த கொலை நடந்த நாளிலிருந்து இந்த வழக்கைத் தொடர்ந்து ஜப்பான் போலீசார் விசாரித்தே வருகின்றனர். எப்படியாவது இந்த கொலை வழக்கில் குற்றவாளியைப் பிடித்துவிடலாம் எனக் கருதி பல்வேறு வழிகளில் விசாரிக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்த ஒரு சந்தேகப்படும் நபரைக் கூட பிடிக்கமுடியவில்லை.

மேலே சொன்ன விஷயங்கள் மட்டுமே இந்த வழக்கில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள். இதைச் செய்ய இதுவரை மொத்தம் 46,044 போலீசார் இந்தவழக்கில் பணியாற்றியுள்ளனர். பலர் இந்த வழக்கில் எந்தையுமே கண்டுபிடிக்க முடியாமல் இந்தவழக்கிலிருந்து தப்பிவிட்டனர். இந்த வழக்கில் இதுவரை டிஎன்ஏ, ரத்த மாதிரி, கைரேகை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உட்பட மொத்தம் 12,545 தடயங்கள் ஆவணங்களாக்கப்பட்டுள்ளது. இத்தனை இருந்தும் இன்றும் இந்த வழக்கில் யாரும் சிக்கவில்லை.

மிகியோ மற்றும் அவர்களது குடும்பத்தை யார் கொன்றது? எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்? கொலைகாரன் குறித்த இத்தனை ஆவணங்கள் இருந்தும் கொலை காரன் சிக்காமல் போனது எப்படி? கொலைக்கும் அவர்கள் வீட்டில் அருகில் உள்ள மைதானத்தில் ஸ்கேட்டிங் விளையாடியவர்களுக்கும் சம்மந்தம் இருக்கிறதா? இவை எல்லாமே தீராத மர்மம் தான்.

இந்த கொலையை நீங்கள் விசாரித்தால் எப்படி விசாரிப்பீர்கள்? இந்த கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.
By... TODAY THAMIZHA

No comments